[ad_1]
புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார்.
'என்னமோ செல்போன்ல, 'இதோ,வந்துட்டேன்'னு சொல்ற மாதிரி, சினிமாவுலேருந்து நாலு பேர் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்க நினைப்பது நடக்கவே நடக்காது"என்று கமல், ரஜினி,விஜய், விஷால்,ஆகியோர் பெயர்களைக் குறிப்பிடாமல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கிப் பேசினார். அதேபோல், ,டி.டி.வி.தினகரனையும் பெயரைக் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார். எம்.ஜி.ஆரின்101வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சாந்தநாதபரம் நான்காவது வீதியில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டி.டி.வி.தினகரனை விமரிசித்துப்பேசினார். அவர் பேசுகையில் "அ.தி.மு.க. என்கிற கப்பல் அரசியல் கடலில் கம்பீரமாக நங்கூரம் பாய்ச்சி நின்றுக்கொண்டிருக்கிறது. அதைப்பார்த்து ஆசைப்பட்ட ஒருவர், சின்ன படகு மூலம் பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அ.தி.மு.க. என்கிற பெரிய கப்பல்போல தானும் மாறுவோம் என்று அவர் பகல் கனவுக் கண்டுகொண்டிருக்கிறார். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் உருவாக்கி, புரட்சித் தலைவியால் நங்கூரம் பாய்ச்சப்பட்ட இந்த அ.தி.மு.க. என்கிற கப்பலை, யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து, மக்களை நேரடியாகச் சந்தித்து அரசியலில் இறங்கியவர்கள், புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும். ஆனால், இன்றைக்கு சினிமாவிலிருந்து கிளம்பியிருக்கும் 4 பேர், போனில்,'இதோ,வந்துட்டேன்'என்று சொல்வது போல அரசியலுக்கு வருகிறார்கள். அந்த 4 பேர் யாரென்றும் உங்களுக்குத் தெரியும். அரசியல் என்ன அவ்வளவு ஈஸியான விஷயமா? அவர்கள் நினைப்பது ஒருநாளும் நடக்கவே நடக்காது" என்றார்.
யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசுவதையே தன்னுடைய புதிய பாணியாக கடைபிடித்து வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அத்துடன்,பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்து, மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக மதியமே அவருக்குச் சொல்லப்பட்டது. கூட்டத்தில் , மக்களுக்கு பதிலளிக்கும் விதமாக,பேருந்துக் கட்டண உயர்வு பற்றி ஏதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருந்தது. ஆனால்,அமைச்சரோ படுஉஷாராக அதுபற்றி வாயே திறக்கவில்லை. மொத்தமாக,ஒருமணி நேரம் மட்டுமே நடந்த இந்தக் கூட்டத்துக்கு முந்தின நாளே தெருவை அடைத்து மேடை அமைத்திருந்தார்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அரசியலுக்கு வருவது என்ன அவ்வளவு ஈஸியான விஷயமா? - அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி
TAGS :
COMMENTS