[ad_1]
கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-க்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
டெல்லி அப்துல் காலம் அறிவியல் மையம் சார்பில், சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, கடந்த ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, அப்துல் கலாம் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், 10- க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அப்துல் கலாம் விருது இன்று வழங்கப்பட்டது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனுக்கும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
விஜய கார்த்திகேயன், கடந்த 2011-ம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சிபெற்று, பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அங்கு, கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தார். தனது 28-வது வயதில், கோவை மாநகராட்சி ஆணையாளராகக் கடந்த 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர்.
அதேபோல, கோவையில் கழிப்பறைகள் கட்டியது, சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக, விஜய கார்த்திகேயனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, டெல்லி அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் இன்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் டம்டாவிடமிருந்து விஜய கார்த்திகேயன் விருதைப் பெற்றுக்கொண்டார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-க்கு அப்துல் கலாம் விருது!
TAGS :
COMMENTS