[ad_1]

காபுலில் பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.



ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்துவருவதால், அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், நேற்று காபுலில் பாதுகாப்புப் படையினர், போதைப்பொருள் கும்பலைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் ராணுவ வீரர் போல் உடையணிந்திருந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.