[ad_1]





Thoothukudi: 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பலியாகியுள்ளார். முருகன் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபம் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.




அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் பக்தர் பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேர் வந்துசெல்லும் இடமென்பதால் இடிபாடுகளில் மேலும், பல பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்டுள்ள விபத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. போலீஸார் பொதுமக்களை கோயிலில் உள்ளே அனுமதிக்கத் தடை விதித்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் திருச்செந்தூர் விரைந்துள்ளார். 


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");