[ad_1]
”இந்த ஆண்டில் இனி மழை கிடையாது” என தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆண்டுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு இனி மழைப்பொழிவு கிடையாது. ஆனால், கீழைக்காற்று வருகிற ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது. வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரையில் மட்டுமே வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை போதுமானதாக இருந்தது.
இதனால் சென்னையில் வருகிற 2018-ம் ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது. கீழைக்காற்று அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்வதால் லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு. வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிகளவு பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் 48 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது. குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 20 சதவிகித மழைப்பொழிவு காணப்பட்டது. இந்த ஆண்டுக்கான கடைசி "வெதர் ரிப்போர்ட்’ இதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
”இனி மழை கிடையாது..”- வெதர்மேன் ரிப்போர்ட்!
TAGS :
COMMENTS