[ad_1]
Chennai: ’அருவி’ திரைப்படக் குழுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வரவழைத்து பாராட்டிப் பரிசளித்துள்ளார்.
பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுவரும் அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டினார். அதை தொடர்ந்து அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பாராட்டியதோடு மட்டுமன்றி சிறந்த படைப்பை கொடுத்துள்ளதாகக் கூறி இருவருக்கும் தங்க செயினை பரிசளித்துள்ளார்.
அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவையும் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். அப்போது எஸ்.ஆர்.பிரபுவிடம் ’என்ன படங்களையெல்லாம் தயாரித்திருக்கிறீர்’ என்பதை கேட்டுள்ளார். தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களைத் தயாரித்துள்ளேன் என்று பிரபு பதிலளித்துள்ளார். அதற்கு ரஜினிகாந்த் ”நீங்கள் தயாரித்த எல்லாப் படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லாப் படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களைத் தொடர்ந்து தயாரியுங்கள்” என்று ஊக்கப்படுத்தியுள்ளார்.இயக்குநர் அருண்பிரபுவிடம் பேசிய ரஜினிகாந்த் ’அருவி ரொம்ப நல்ல படம் , ரொம்ப அழுதேன் , நிறைய சிரிச்சேன். இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை கொடுத்ததற்காக எங்களைப் போன்ற மக்கள் உங்களுக்குக் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்’ என்று பாராட்டு மழையைப் பொழிந்துள்ளார் ரஜினிகாந்த். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’ரொம்ப அழுதேன், நிறைய சிரிச்சேன்!’ - ’அருவி’ படத்தை பார்த்த ரஜினியின் பாராட்டும் பரிசும்
TAGS :
COMMENTS