[ad_1]

விஷால் அரசியலில் இறங்கினால் அவருடைய சினிமா வாழ்வும் அஸ்தமனமாகிவிடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 





ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள்.


திருமாவளவன் : விஷாலும் அரசியலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பாகவே இதனைப் பார்க்கிறேன். விஷாலும் தீவிர அரசியில் ஈடுபட முடிவு எடுத்துவிட்டார்.

 வானதி சீனிவாசன் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷாலுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். தமிழக அரசியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியப் பங்குவகிக்கும். 

தமிழருவி மணியன் : மாற்று அரசியலை வளர்த்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கோடம்பாக்கத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறும் அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. விஷால் எல்லாம் ரஜினி ஆகிவிட முடியுமா? என்று தெரிவித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத் : எங்களுக்கும் தி.மு.கவுக்கும் மட்டுமே போட்டி. விஷாலை நாங்கள் போட்டியாகக் கருதவில்லை. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை விஷால் பிரிக்க வாய்ப்புள்ளது. தினகரன் அரசியலுக்கு வரவேண்டும் என்று தினகரன் முன்னரே அழைப்புவிடுத்திருந்தார். 

ராஜேந்திர பாலாஜி : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டியில் விஷால் டெபாசிட் இழப்பார். அவர், அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, திரைப்பட வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும். எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது. 

அமீர் : யாரை வீழ்த்துவதற்காக விஷால் களிமறங்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை. விஷால் நோக்கம் பற்றி தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. 

சுந்தர்.சி : விஷால் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் உள்ளது. வருவேன், வருவேன் என்று கூறாமல் அரசியலுக்கு வந்தது, சிறப்பான ஒன்று. 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");