[ad_1]
2ஜி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா ‘2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2ஜி தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.இந்நிலையில், 2ஜி தீர்ப்புக்கு எதிராக ட்வீட் செய்துள்ள ஹெச்.ராஜா, “குன்ஹா தீர்ப்பைக் கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம். சி.ஏ.ஜி அறிக்கை வந்தது, உச்ச நீதிமன்றம் 2ஜி உரிமங்களை ரத்து செய்தது, 2011-ல் இந்த வழக்கு தொடரப்பட்டது அனைத்தும் நடந்தது காங்கிரஸ் ஆட்சியின் கீழ். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் ரீதியாகப் பா.ஜ.க மீது சிப்பல், சிதம்பரம், MMS குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனமானதாகும்" என்று கபில் சிபில், மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சாடி பதிவுசெய்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`காத்திருப்போம்' - 2ஜி தீர்ப்பு குறித்து ஹெச்.ராஜா அடடே கருத்து
TAGS :
COMMENTS