[ad_1]
மூத்த பத்திரிகையாளரும், எம்.யூ.ஜெ. (மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ்) தலைவருமான மோகன் (54) இன்று மாரடைப்பால் காலமானார்.சென்னை தினகரன் பதிப்பில் மூத்த நிருபராக பணியாற்றி வந்த மோகனுக்கு மனைவி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோகனுக்கு சொந்த ஊராகும். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். இன்று காலை, உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மோகன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து விட்டனர். மோகனின் உடல், எண்:215/144, சென்னை (பார்த்தசாரதி கோயி ஆர்ச் அருகே) திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
மோகன் இறந்த தகவல் அறிந்ததும், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களின் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை மோகன் முன்னின்று நடத்தியவர். சுதேசமித்ரன், போலீஸ் செய்தி, நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய மோகன், அரசுத்துறை சார்ந்த செய்திகளைக் கொடுப்பதில் திறமை வாய்ந்தவர். குறிப்பாய் டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டங்கள், அவர்களின் பணி நிரந்தரம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வந்தார். இடதுசாரி சிந்தனை கொண்ட மோகன், தன்னுடைய கட்டுரைகளையும் அதே போக்கில் கொண்டு சென்றவர். மோகனின் இழப்பு பத்திரிகைத்துறைக்கும், அவருடைய குடும்பத்துக்கும் பேரிழப்பு!
மூத்த பத்திரிகையாளர் மோகன் மறைவு! | Senior journalist Mohan died today
TAGS :
COMMENTS