[ad_1]
இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகளுக்கிடையே சுமூக உறவு இல்லை என்பது இரு அணியினரின் கருத்துகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறது. இது பற்றி முதலில் கொளுத்தி போட்டவர் எம்.பி. மைத்ரேயன்தான். `அணிகள் இணைந்துவிட்டன... ஆனால் மனங்கள்?' என்று அவரது முகநூலில் சில நாள்களுக்கு முன்னர் எழுதிய கருத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் அணியினர் பலர் இரு அணிகளுக்கிடையில் இருக்கும் உரசல் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இன்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், `அ.தி.மு.க-வின் இணைப்புக்குப் பின்னர் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சேர்ந்து செயல்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்கள் இரண்டு அணிகளாகவே பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்' என்று கூறி இணைப்பில் உள்ள பிளவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், `மதுரையைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வினர் சகோதரர்களாகவே பழகி வருகின்றனர். இரட்டை இலையை உயிரைக் கொடுத்தாவது தக்க வைப்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்களின் லட்சியம். முப்பெரும் விழாவில் ஓ.பி.எஸ் பங்கேற்காதது பற்றி முதல்வர், அமைச்சர் உரிய விளக்கம் அளித்துவிட்டனர்' என்று மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இரு அணிகள் மத்தியில் சுமூக உறவு உள்ளதா? - செல்லூர் ராஜூ பதில்!
TAGS :
COMMENTS