[ad_1]
இந்து தீவிரவாதம் இனியும் இல்லையென்று கூற முடியாது என்று தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேசத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் இதழில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்னும் தொடரை எழுதி வருகிறார். இந்த வாரம் அந்தத் தொடரில், “இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். `எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது” என்று கமல்ஹாசன் எழுதி இருந்தார்.
நடிகர் கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க, சிவசேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 500, 511, 298, 295 (ஏ), 505 (சி) ஆகிய பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பிரதீப்
'இந்து தீவிரவாதம்' எனக் கருத்து! நடிகர் கமல் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கு
TAGS :
COMMENTS