[ad_1]





ஜப்பானில், 20 விநாடிகள் முன்னதாக ரயில் கிளம்பியதற்காக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. 




ஜப்பான் மக்கள், நேரம் தவறாமையைக் கடைபிடிப்பதில் உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள். விழாக்கள், நிகழ்ச்சிகள், குறித்த நேரத்தில் தொடங்கும். பேருந்து, ரயில் போன்ற பொதுமக்கள் சாதனங்கள், ஒரு விநாடிகூட தாமதிக்காமல் சென்று வருபவை. 

உலகின் மிகப் பெரிய நகரமும் அதிக ஜனத்தொகைகொண்ட டோக்கியோ நகரத்தின் முதுகெலும்பு, ரயில் போக்குவரத்துதான். தினமும் லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் ரயில்களில்தான் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். அதுபோல, நாட்டின் முக்கிய நகரங்களைப் புல்லட் ரயில்கள் இணைக்கின்றன. மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை, புல்லட் ரயில்கள். 

முதன்முறையாக ஜப்பானில், ரயில் ஒன்று குறிப்பிட்ட நேரத்தைவிட, 20 விநாடிகள் முன்னதாகக் கிளம்பியுள்ளது. நேற்று, மினாமி நகரயாஹமா என்ற இடத்திலிருந்து டோக்கியோ செல்லவேண்டிய சுகுபா எக்ஸ்பிரஸ், காலை 9.44.40 விநாடிகளுக்குப் புறப்பட வேண்டும். ஆனால், 20 விநாடிகள் முன்னதாகப் புறப்பட்டுப் போய்விட்டது. இதனால், எந்தப் பயணியும் பாதிக்கப்படவில்லை. எனினும், சுகுபா ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசை மக்கள் பாராட்டிவருகின்றனர். 


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");