[ad_1]

துபாயில் இருக்கும் புர்ஜ் அல் அராப்பில் `2.0' செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினி, `நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்' என்று கூறினாராம்.



இயக்குநர் ஷங்கர் பேசுகையில், `2.0, இயந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இது ஒரு தனி திரைப்படமாகத்தான் இருக்கும்' என்றார். பின்னர் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0 திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றன' என்றார். நாளை 2.0 திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.