[ad_1]
Chennai:
பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக், தனது மனைவியுடன் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
நான்கு நாள்கள் அரசுமுறை பயணமாக பூடானின் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் மற்றும் அவரது மனைவியான கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் ஆகியோர் இன்று இந்தியா வருகிறார்கள். நவம்பர் மூன்றாம் தேதிவரை இந்தியாவில் இருக்கும் இவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் விருந்தளிக்கிறார். இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமானது இந்தியாவுக்கும், பூட்டானுக்கும் இடையே நல்ல உறவை ஏற்ப்படுத்துவதாகும். பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் மற்றும் அவரது மனைவி கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் ஆகியோரின் இந்த அரசுமுறை பயணத்தில் இந்தியாவுக்கும், பூட்டானுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக பூட்டான் மன்னர் இன்று இந்தியா வருகை!
TAGS :
COMMENTS