சென்னை: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஹரியானாவில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் அண்மையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியள்ளது. அதில்,பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும், பள்ளி ஊழியர்களின் விவரங்களை போலீசார் மூலம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்குள் வெளிநபர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.