
நீட் தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்து தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த முடிவில் இருந்து மத்திய அரசும், மாநில அரசும் முன்னுக்குப் பின் முரணாகிப் பேசிவந்தன. இந்த நிலையில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது.
இந்த நிலையில் +2-வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியும் மருத்துவ சீட் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் தற்கொலை செய்திருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த அனிதா. இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/varusarath/status/903606844635004929
வரலெட்சுமி சரத்குமார் :
இந்த மாதிரியான தற்கொலையைத் தூண்டும் கல்வி முறை நமக்கு கட்டாயம் தேவையா?
https://twitter.com/vivekalyrics/status/903857314263834624
பாடலாசிரியர் விவேகா :
'மருத்துவ முத்தம்' இருக்கட்டும் இந்த மருத்துவ யுத்தத்தையும் கவனிப்போம்.
https://twitter.com/csamudhan/status/903617768506802177
செல்வராகவன் :
#RIPAnitha என்னை நம்புங்க... வாழ்க்கை பல வாய்ப்புகளைத் தரும்; எதிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதை நான் பலவருடங்களுக்கு முன்பே புரிந்துகொண்டேன். தற்கொலைகள் தீர்வல்ல.
https://twitter.com/Lyricist_Vivek/status/903670280408535040
ஶ்ரீதிவ்யா :
'நீட் எனும் பெயரால் ஒரு திறமையான மாணவி சாகடிக்கப்பட்டிருக்கிறார்.
https://twitter.com/i_Sri_Divya/status/903600213876760576
திவ்யதர்ஷினி :
நீ படித்த புத்தகங்கள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்திக்கக் கற்றுக்கொடுக்கவில்லையா?
https://twitter.com/DhivyaDharshini/status/903651097268543488
கஸ்தூரி :
கண்ணீரில் நனைந்திருக்கும் பக்ரீத் வாழ்த்து.
https://twitter.com/KasthuriShankar/status/903837642181099521
நிக்கி கல்ராணி :
ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை இப்படித்தான் முடியணுமா?
https://twitter.com/nikkigalrani/status/903659730651848704
COMMENTS