சென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை போல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் துப்பாக்கிகளை வைத்து ஆயுத பூஜை நடத்தியுள்ளார்.
அர்ஜூன் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கிகள் சகிதம் ஆயுத பூஜை நடத்தியதை பெருமிதமாக போட்டது சர்ச்சையானது. அர்ஜூன் சம்பத் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் அரிவாள், துப்பாக்கிகளுக்கு வீட்டில் ஆயுத பூஜை செய்ததாக படம் ஒன்றை வெளியிட்டிருப்பதும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த படத்தில் 2 துப்பாக்கிகள், ஒரு அரிவாள் ஆகியவற்றை கார் முன்பாக வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது இடம்பெற்றுள்ளது.
கடந்த 10-ந் தேதி இப்படத்தை கார்த்தி சிதம்பரம் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
COMMENTS