பீதர்: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த விவரம் வந்தவுடன் அதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கும் கர்நாடக அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பார்த்தது போல செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டது. 3 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 6000 கன அடி நீரை விடுவிக்க இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பால் கர்நாடகத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் நகரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதலத்வர் சித்தாரமையா பேசுகையில், இப்போதைக்குத் தண்ணீர் விட முடியாது. உத்தரவு குறித்த விவரம் இன்னும் எனக்குத் தெரியாது. கிடைத்தவுடன் கருத்து சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார் சித்தராமையா.
உத்தரவு கைக்கு வரவில்லை, தண்ணீர் திறக்க முடியாது,... சித்தராமையா #Cauveryverdict
English summary
Karnataka chief minister Siddaramaiah has said that he will discuss with the legal experts on the SC order.
TAGS :
COMMENTS