கொஞ்சம் அப்படியே உங்கள் பள்ளிக்கூட நாட்களை நோக்கி பிளாஷ் பாக்ல போய் பாருங்கள். பள்ளி செல்லும் நாட்களில் மத்திய உணவு இடைவெளி ஒரு மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது. அங்கிருந்த உணவகத்தில் வெறும் காய்ந்து போன ரொட்டியோ அல்லது தோசையோ கிடைத்திருந்தாலும் உங்கள் வழக்கமான வகுப்புகளில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் உரையாடவாவது நேரம் வாய்த்தது.
இந்த வேலைக்குப் போகும் காலங்களில், மத்திய உணவு இடைவேளை அனைவருக்கும் ஒரு இரண்டாம் பட்சமாகவே உள்ளது. இதற்கான முக்கியத்துவமும் குறைந்துகொண்டே வருவதும் கவலைக்குரிய போக்காக உள்ளது.
யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் அமைப்பின் தகவல்கள் படி அங்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 42% பேர்கள் மிகவும் அரிதாகவோ அல்லது சில சமயங்களில் மட்டுமே உணவு இடைவேளை எடுத்துக்கொண்டதும் 39% பேர்கள் தங்கள் பணி செய்யும் மேஜையிலேயே உன்னுவதும் தெரிய வந்துள்ளது.
இது ஒரு நல்ல அறிகுறியல்ல. இன்னும் சொல்லப் போனால் திறமைசாலிகள் தங்கள் உணவு இடைவேளையை தங்கள் செயலாற்றலை வளர்த்துக் கொள்ளவே பயன்படுத்துகின்றனர்.
தோல்வி முகம் காண்பவர்கள் இந்த இடைவேளைகளை தவறாகக் கையாண்டு தங்களை தாங்கலே மழுங்கடித்துக் கொள்ளுகிறார்கள்.வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் உணவு இடைவேளையின் போது பெரும்பாலும் தவிர்க்கும் ஒன்பது செயல்கள் இதோ உங்களுக்காக.
1. வேலை செய்யும் மேஜையிலேயே உண்பது
இந்த வியாக்கியானங்களைச் செய்துகொண்டிருக்கும் நானே ஒரு பாசாங்குத்தனம் தான் செய்துகொண்டிருக்கிறேன்... சுண்டலைத் தின்றுகொண்டு.
இருந்தாலும் இந்தப் பழக்கத்திலிருந்து சற்று விடுபட்டு வெளியே வருவது ஒரு நல்ல விஷயம்தான். உண்மை என்னவென்றால் இந்தப் பழக்கம் இடைவெளிக்காக நம்மை ஏங்க வைக்கும். மேஜையில் அல்லது உங்கள் டெஸ்கிலேயே உட்கார்ந்து சாப்பிடுவதால் அதிக வேலையைச் செய்ய முடியலாம். ஆனால் அதனை ஈடுபாட்டோடும் நயத்தோடும் செய்ய முடியாது என்பதே உண்மை.
உங்கள் உணவு இடைவேளையில் வேலை செய்து அதிக வேலைகளை முடிக்க..." data-gal-src="tamil.goodreturns.in/img/600x100/2016/09/26-1474865500-eatingatdesk1.jpg">
2. லன்ச் டைம் முழுவதும் வேலை செய்வது
வாழ்வில் வெற்றிகரமாக இருப்பவர்கள் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்கிறார்கள்.
உங்கள் உணவு இடைவேளையில் வேலை செய்து அதிக வேலைகளை முடிக்க முடியும். ஆனால் வேலையின் தரம் குறைந்து விடும்.
"மக்கள் தங்கள் சூழலை மாற்றிக் கொள்ளும்போது குறிப்பாக இயற்கையான சூழலுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ளும் போது நுண்ணறிவும் கண்டுபிடிப்புகளும் நிகழும்" என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர் மற்றும் பேராசிரியர் கிம்பர்லி எல்பாஷ் தெரிவிக்கிறார்.
சாப்பிடும்போது அந்த பாழாய்ப்போன மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்.
COMMENTS